This page has not been fully proofread.

267
 
स चाद्य दिवसः प्राप्तः ततो नैनं जहाम्यहम् ॥
सुप्तं चैनं यमस्साक्ष । दुपागच्छत् सकिङ्करः ।
स एनमनयद्धद्धा दिशं पितृनिषेविताम् ॥
अस्तौपं तमहं देवं सत्येन वचसा विभुम् ।
पञ्चैव तेन मे दत्ता वराः भृणुत तान् मम ॥
चक्षुषी च स्वराज्यं च द्वौ वरौ शुरस्य 71
लब्धं पितुः पुत्रशतं पुत्राणां चात्मनश्शतम् ॥
चतुर्वर्पशतायुमें भर्ता लब्धश्च सत्यवान् ।
भर्तुर्हि जीवितार्थं तु मया चीर्णमिदं व्रतम् ॥
एतत् सर्वं मयाssख्यातं कारणं विस्तरेण वः ।
यथावृत्तं सुखोदर्क मिदं दुःखं महन्मम ॥
 
நாரதரால் எனது பதிக்கு மரணம் சொல்லப்பட்டது. அந்த
நாள் இன்று வந்துவிட்டது. ஆகையால் என் பதியை விடாம
லிருந்தேன். என் பதி தூங்கும்பொழுது, கிங்கரர்களுடன்
யமன் தானே இவரிடம் வந்தார். அவர் என் பதியைக் கட்டி
எடுத்துத் தெற்குத் திக்கில் கொண்டுசென்றார். அந்தத் தர்மராஜ
ப்ரபுவை நான் உண்மையான வாக்யங்களால் ஸ்துதித்தேன்.
அவரால் எனக்கு ஐந்து வரன்கள் அளிக்கப்பட்டன. அவை
களைக் கேளும். கண்களின் ப்ராப்தியும், ராஜ்ய ப்ராப்தியும்
என்ற இரண்டு வரன்கள் எனது மாமனாருக்காக. எனது பிதா
வுக்காக நூறு புத்ரர்கள் அடையப்பட்டனர். எனக்கும் நூறு
புத்ரர்கள் வேண்டப்பட்டனர். எனது பர்த்தாவான ஸத்ய
வானுக்கு நானூறு வர்ஷம் ஆயுஸ் வரனாக அடையப்பட்டது.
இவ்விதம் ஐந்து வான்கள். பர்த்தா ஜீவித்திருப்பதற்காகவே
இந்த வ்ரதத்தை அனுஷ்டித்தேன். இந்தக் காரணம் முழுவதும்
உங்களுக்கு விரிவாய் உரைத்தேன். ஸுகத்தை மேற்கொண்ட
தாய் எனது மஹாதுக்கம் எவ்விதம் ஆனதோ அவ்விதம்
உரைத்தேன்.