This page has been fully proofread once and needs a second look.

समाहितेन चीर्णानि सर्वाण्येव व्रतानि मे ।
वायुभक्षोपवासश्च कृतो मे विधिवत्सदा ॥
 
अनेन तपसा वेद्मि सर्वं परचिकीर्षितम् ।
सत्यमेतन्निबोधध्वं ध्रियते सत्यवानिति ॥
 
शिष्य उवाच-
उपाद्ध्यायस्य मे वक्त्रा द्यथा वाक्यं विनिस्सृतम् ।
नैव जातु भवेन्मिथ्या तथा जीवति सत्यवान् ॥
 
ऋषय ऊचुः-
यथाऽस्य भार्या सावित्री सर्वैरेव सुलक्षणैः ।
अवैधव्यकरैर्युक्ता तथा जीवति सत्यवान् ॥
 
भरद्वाज उवाच-
यथाऽस्य भार्या सावित्री तपसा च दमेन च ।
आचारेण च संयुक्ता तथा जीवति सत्यवान् ॥
 
கவனமுடையவனாய் ஸகல வ்ரதங்களையுமனுஷ்டித்தேன்.
வாயுவை மட்டில் பக்ஷித்து உபவாஸமனுஷ்டித்தேன்.
இந்தத் தபோ மஹிமையினால் பிறர் செய்யவிரும்பிய
எல்லாவற்றையும் அறிவேன். ஸத்யமிது என்று அறியுங்கள்,
ஸத்யவான் பிழைத்திருக்கிறானென்று.
 
சிஷ்யன்:- எனது உபாத்யாயரின் வாயினின்றும் எவ்விதமான
வார்த்தை வந்ததோ அது ஒருகாலும் பொய்யாவதில்லை.
ஆகையால் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.
 
ருஷிகள் சொல்வது:- ஸத்யவானின் பார்யையான ஸாவித்ரீ,
எவ்விதம் ஸௌமங்கல்யகரங்களான ஸகல சுபலக்ஷணங்களுடனும்
கூடியிருக்கின்றாளோ அவ்விதமே ஸத்யவான்
பிழைத்திருக்கிறான்.
 
பரத்வாஜர்:- ஸத்யவானின் பார்யையான ஸாவித்ரீ எவ்விதம்
தபஸ், இந்த்ரிய ஜயம், ஆசாரம் இவைகளுடன் கூடியிருக்கின்றாளோ
அவ்விதம் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.