This page has been fully proofread once and needs a second look.

शिरोमितापसन्तप्तः स्थातुं चिरमशक्नुवन् ।
तवोत्सङ्गे प्रसुप्तोऽस्मि इति सर्वं स्मरे शुभे ।
त्वयोपगृढस्य च मे निद्रयाऽपहृतं मनः ।
ततोऽपश्यं तमोघोरं पुरुषं च महौजसम् ॥
तद्यदि त्वं विजानासि किं तत् ब्रूहि सुमद्ध्यमे ।
स्वमेन यदि वा दृष्टो मयि वा सत्यमेव तत् ॥
तमुवाचाथ सावित्री रजनी व्यवगाहते ।
श्वस्ते सर्वं यथावृत्त माख्यास्यामि नृपात्मज ॥
उत्तिष्ठोत्तिष्ठ भद्रं ते पितरौ पश्य सुव्रत ।
विगाढा रजनी चेयं निवृत्तश्च दिवाकरः ॥
नक्तञ्चराचरन्त्येते हृष्टाः क्रूराभिभाषिणः ।
श्रूयन्ते पर्णशब्दाश्च मृगाणां चरतां वने ।
एता घोरान् शिवा नादान् दिशं दक्षिणपश्चिमाम् ।
आस्थाय विरुवन्त्युग्राः कम्पयन्त्यो मनो मम ॥
 
அதனால் வருந்தியவனாய் நிற்கமுடியாமல், உன் மடியில்
படுத்துத் தூங்கினேன், என்றவரை முழுவதையும் நினைக்
கின்றேன்.
உன்னால் அணைக்கப்பட்ட எனது மனம் நித்ரையால்
அபஹரிக்கப்பட்டது. பிறகு இருள்போல் பயங்கரனான பெரிய
ஒரு புருஷனைக் கண்டேன். அது விஷயத்தை நீ அறிவாயாகில்
சொல்லு. நான் ஸ்வப்னத்தில் கண்டேனா, அல்லது
யதார்த்த
மாகவே நடந்ததா?
 
அவனை நோக்கிச் சொல்லுகிறாள் ஸாவித்ரீ:- ஓ ராஜபுத்ர!
இரவு பரவுகிறது. எல்லாவற்றையும் நடந்தபடி நாளைய தினத்தில்
சொல்லுகிறேன். எழுந்திருமெழுந்திரும் உமக்கு மங்களம்.
மாதாபிதாக்களைப் பார்க்கக்கடவீர். ஸூர்யன்
மறைந்து
விட்டான். இதோ இரவும் பரவிவிட்டது. இதோ இவ்வில்
ஸஞ்சரிக்கும் ப்பாராணிகள் பயங்கரங்களாய், பயங்கர சப்தங்
களுடன்
ஸஞ்சரிக்கின்றன. காட்டில் ஸஞ்சரிக்கும் மருகங்களின்
காலில் படும் இலைகளின் சப்தங்கள் கேட்கப்படுகின்றன. இதோ
இந்த நரிகள், தென்மேற்குத் திக்கிலிருந்து என் மனதை
அசைக்கின்றவைகளாய், பயங்கரமாய்ச் சப்திக்கின்றன.