This page has not been fully proofread.

245
 
विन। पुनस्सत्यवतोऽस्य जीवितं वरं द्वितीयं वरयस्व भामिनि ॥
सावित्र्युवाच -
 
हृतं पुरा मे श्वशुरस्य धीमतः स्वमेव राज्यं लभतां स पार्थिवः ।
जह्यात् स्वधर्मान्न च मे गुरुर्यथा द्वितीयमेतं वरयामि ते वरम् ॥
 
यम उवाच-
स्वमेव राज्यं प्रतिपत्स्यतेऽचिरात् न च स्वधर्मात् परिहास्यते नृपः ।
कृतेन कामेन मया नृपात्मजे निवर्त गच्छस्व न ते श्रमो भवेत् ॥
सावित्रयुवाच -
 
प्रजास्त्वयैता नियमेन संयता नियम्य चैता नियमेन काम्यया ।
ततो यमत्वं तव देव विश्रुतं निबोध चेमां गिरमीरितां मया ॥
अद्रोहस्सर्वभूतेषु कर्मणा मनसा गिरा ।
 
கூலமாயும், வித்வானுக்கும் நற்புத்தியை வ்ருத்தி செய்வதாயும்,
ஹிதம் செய்வதாயுமுள்ளது. ஆகையால் ஸத்யவானின் உயிரைத்
தவிர வேறு வரனை மறுபடி வரிப்பாயாக.
 
ஸாவித்ரீ:- புத்திமானாகிய எனது மாமனாரின் ராஜ்யம்
முன்பு சத்ருவால் அபஹரிக்கப்பட்டது. அவ்வரசர் தமது
ராஜ்யத்தை அடையவேண்டும். அவர் தமது தர்மங்களை விடாம
லிருக்கவேண்டும். இதை இரண்டாவது வானாக உம்மிடமிருந்து
வரிக்கின்றேன்.
 
யமன்:- ஒ ராஜபுத்ரீ! அரசன் சீக்ரத்தில் தனது ராஜ்
யத்தை அடையப்போகிறான். தனது தர்மத்தினின்றும் நழுவ
மாட்டான். உன் ஆசையைப் பூர்த்தி செய்தேன். இத்துடன் நீ
திரும்பிச்செல். உனக்கு ச்ரமம் உண்டாகவேண்டாம்.
 
ஸாவித்ரீ:- உலகத்தில் காணப்படும் ஆத்மக்ஞானமற்ற
இந்த ப்ரஜைகளை எல்லாம் தண்டனையால் கட்டுப்படுத்துகின்றீர்.
பிறகு அவர்களுக்குக் கர்மபலத்தையுமளிக்கின்றீர். ஆகையால்
உமக்கு யமன் என்ற சப்தம் பிரஸித்தமாயுள்ளது. ஹே தேவ!
நான் சொல்லப்போகும் இந்த வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.
ஸகல ப்ராணிகளிடமும் மனம், வாக்கு, காயம் இவைகளால்