This page has been fully proofread once and needs a second look.

यो वदेदिह सत्यानि गुरुं सन्तोषयेत च ।
हिंसितश्च न हिंसेत तं देवा ब्राह्मणं विदुः ॥
जितक्रोधो धर्मपर: स्वाद्ध्यायनिरतश्शुचिः ।
कामक्रोधौ वशे यस्य तं देवा ब्राह्मणं विदुः ॥
यस्य चात्मसमो लोको धर्मज्ञस्य मनस्विनः ।
सर्वधर्मेषु चरतः तं देवा ब्राह्मणं विदुः ॥
योऽद्ध्यापये दधीयीत यजेद्वा याजयेत वा ।
दद्याद्वाऽपि यथाशक्ति तं देवा ब्राह्मणं विदुः ॥
ब्रह्मचारी च वेदान् यो ह्यधीयात् द्विजपुङ्गव ।
स्वाद्ध्यायवानमत्तो वै तं देवा ब्राह्मणं विदुः ॥
याह्मणानां कुशलं तदेषां परिकीर्तयेत् ।
सत्यं तथा व्याहरतां नानृते रमते मनः ॥
धर्मं तु ब्राह्मणस्याहुः स्वाद्ध्यायं दममार्जवम् ।
इन्द्रियाणां निग्रहं च शाश्वतं द्विजसत्तम ॥
 
எவன் உண்மையைப் பேசுபவனோ ,குருவை ஸந்தோஷிக்கச்
செய்பவனோ,பி றரால் ஹிம்ஸிக்கப்பட்டாலும் பிறனை ஹிம்ஸிக்
காதவனோ அவனையே தேவர்கள் ப்ராம்ஹணனென்கிறார்கள்.
கோபத்தை ஜயித்தவனும், தர்மபரனும், வேதாத்யயனபரனும்,
சுத்தனும், காமக்ரோதங்களை வசமாக்கியவனுமாகியவனை
ப்ராம்ஹணனென்கின்றனர். எவனுக்கு உலகம் தனக்குச்
சமமாயுள்ளதோ, தர்மமறிந்தவனும், நல்ல மனமுடையவனும்,
ஸகல தர்மங்களையுமனுஷ்டிப்பவனுமான அவனை ப்ராம்ஹணன்
என்கின்றனர்.
 
எவன், அத்யாபனம், அத்யயனம், யஜநம், யாஜநம், யதா
சக்திதானம் இவைகளை அனுஷ்டிக்கின்றானோ அவனை
ப்ராம்ஹணனென்கிறார்கள். எந்த ப்ரம்ஹசாரீ வேதங்களை
அத்யயனம் செய்கின்றானோ அவனை ப்ராம்ஹணனென்கின்றனர்.
ப்ராம்ஹணர்களுக்கு எது மங்களகரமோ அதைச் சொல்ல
வேண்டும். ஸத்யமாய்ப் பேச வேண்டும். பொய்யில் மனம்
நாடக்கூடாது. அத்யயனம், மனதின் நிக்ரஹம், கபடமின்மை,
இந்த்ரியங்களை அடக்குதல் இவைகள் சாச்வத தர்மமென்கிறார்கள்.