This page has been fully proofread once and needs a second look.

देवतानां पितॄणां च ऋषीणां च महात्मनाम् ।
श्रुतः पूर्वं मया धर्मो महानतिथिपूजने ॥
कुरुष्वानुग्रहं मन्ये सत्यमेतत् ब्रवीमि ते ।
निश्चिता खलु मे बुद्धि रतिथिप्रतिपूजने ॥
ततस्सत्यप्रतिज्ञोऽसौ स पक्षी प्रहसन्निव ।
तमग्निं त्रिः परिक्रम्य प्रविवेश महामतिः ॥
अग्निमध्यं प्रविष्टं तं लुब्धो दृष्टाट्वाऽथ <flag>पत्निणम् </flag>
चिन्तयामास मनसा किमिदं नु कृतं मया ॥
अहो मम नृशंसस्य गर्हितस्य स्वकर्मणा ।
अधर्मस्सुमहान् घोरो भविष्यति न संशयः ॥
एवं बहुविधं भूरि विललाप स लुब्धकः ।
गर्हयन् स्वानि कर्माणि द्विजं दृष्ट्वा तथागतम् ॥
श्रीभीष्मः-
ततस्तु लुब्धकः पश्यन् कृपयाऽभिपरिप्लुतः ।
 
அப்புறா மறுபடி சொல்லிற்று. 'தேவர்கள், பித்ருக்கள், ருஷிகள்
இவரிடமிருந்து முன் நான் கேட்டுள்ளேன், 'அதிதியைப்
பூஜிப்பதில் பெரிய புண்யம் உண்டாகின்றது’ என்று.
ஆகையால் எனக்கு நீர் அனுக்ரஹம் செய்யவேண்டும். உமக்கு
ஸத்யமாய்ச் சொல்லுகிறேன். அதிதி பூஜையில் என் புத்தி
த்ருடமாயுள்ளது, என்று சொல்லி அந்தப் பக்ஷீ
ஸந்தோஷத்துடனேயே அந்த அக்னியை மூன்று முறை
வலமாய்ச் சுற்றி அதில் நுழைந்துவிட்டது.
 
அக்னியின் நடுவில் நுழைந்த பக்ஷியை நோக்கி வேடன்,
இதென்ன கார்யத்தைச் செய்தேன். ஐயோ! காதுகனாயும்,
கார்யங்களால் இழிவானவனுமாகிய எனக்குப் பெரிய பாபம்
உண்டாகப்போகிறது, ஸந்தேஹமில்லை, என்று மனதால்
சிந்தித்து, பலவிதமாய் மிகவும் புலம்பினான். அவ்விதமாகிய
பக்ஷியைப் பார்த்துத் தன் கொடும் செயல்களை வெறுத்தான்.
 
பிஷ்மர்:- இவ்விதம் நெருப்பில் புறாவைப் பார்த்த வேடன்