This page has not been fully proofread.

144
 
औरसो धर्मपत्नीजः तत्समः पुत्रिकासुतः ।
क्षेत्रजः क्षेत्रजातस्तु सगोत्रेणेतरेण वा ॥
गृहे प्रच्छन्न उत्पन्नः गृढजस्तु सुतः स्मृतः ।
कानीनः कन्यकाजातः मातामहसुतो मतः ॥
अक्षतायां क्षतायां वा जातः पौनर्भवस्सुतः ।
दद्यान्माता पिता वा यं स पुत्रो दत्तको भवेत् ॥
क्रीतस्तु ताभ्यां विक्रीतः कृत्रिमः स्यात् स्वयं कृतः ।
दत्तात्मा तु स्वयं दत्तः गर्भे विन्नः सहोदजः ॥
उत्सृष्टो गृह्यते यस्तु सोऽपविद्धो भवेत् सुतः ।
पिण्डदोंशहरश्चैपां पूर्वाभावे परः परः ॥ इति ॥
 
பிறந்தவன் ஔரஸனெனப்படுவான். புத்ரிகாபுத்ரனும் அவ
னுக்குச் சமமானவன். தன் பத்னியினிடம், ஸகோதரனாலோ,
அந்ய ஸகோதரனாலோ உண்டானவன் க்ஷேத்ரஜாதன் எனப்படு
வான். வீட்டில் மறைவாய் உண்டானவன் கூடஜன் எனப்படு
வான். விவாஹமாகாதவளிடம் பிறந்தவன் கானீநன் எனப்படு
வான். இவன் மாதாமஹனின் பிள்ளை ஆவான், அக்ஷதையாக
வோ, க்ஷதையாகவோ உள்ள, புனர்ப்பூவினிடத்தில் (இரு
முறை விவாஹம் செய்யப்பட்டவள்) பிறந்தவன் பௌனர்ப்
பவன். தாய், அல்லது பிதாவினால் எந்தப் புத்ரன் கொடுக்கப்
பட்டானோ அவன் தத்தன் எனப்படுவான். தாய், அல்லது
பிதாவினால் விற்கப்பட்டவன் க்ரீதன் எனப்படுவான். தானாகவே
ஒருவனைப் புத்ரனாய்ச் செய்துகொண்டால் அவன் க்ருத்ரிமன்
எனப்படுவான். தானாகவே தன்னைக் கொடுத்தவன் தத்தாத்மா
எனப்படுவான். கர்ப்பிணியாயிருப்பவளை மணந்து, பிறகு அவ
ளிடம் பிறந்தவன் ஸஹோடஜன். மாதா பிதாக்களால் தள்ளப்
பட்டு எவன் க்ரஹிக்கப்படுகிறானோ அவன் அபவித்தன் எனப்
படுவான். இந்தப் பிள்ளைகளுள், முந்தியவன் இல்லாவிடில்
பிந்தியவன், பிண்டதானத்திலும், தனத்தை அடைவதிலும்
அதிகாரியாகிறான்" என்று.