This page has not been fully proofread.

5
 
ஆர்யா சதகம்
 
இந்த சலோகத்தில் அம்பிகையானவள் பலவிதமான நாமங்
களால் சொல்லப்பட்டிருக்கிறாள். அம்பிகையின் ரூபமான குண்
டலினீ சக்தியானவள் "புஜகநிபம் அத்யுஷ்டவலயம் " என்றபடி
மூன்றரைச் சுற்றுக்களுடைய ஸர்ப்பாகாரமாக சுருண்டிருப்பதால்
குடிலையென்று பெயர் ஏற்பட்டது. பக்தர்களுக்கு விரோதிகளா
யிருப்பவர்களிடத்தில் அம்பிகை கோபத்தோடிருப்பதால் சண்டீ
என்று பெயர். (தேவீ மாஹாத்ம்யத்தின் மூன்றாவது பாகமான
உத்தர சரித்ரத்தில் ப்ரதிபாதிக்கப்படும் அம்பிகையின் முக்யமான
ரூபத்திற்கு சண்டி என்று பெயர். இதிலிருந்து தேவீ மாஹாத்
மயத்திற்கே சண்டி என்ற பெயரும் உண்டு). அம்பிகையின்
ரூபமான காளிகாதேவியானவள் சண்டன், முண்டன் என்ற இரு
அஸுரர்களை ஸம்ஹாரம் செய்ததினால் அவளுக்குச் சாமுண்டா
என்று பெயர் ஏற்பட்டது.
 
47
 
'யஸ்மாத் சண்டம் ச முண்டம் ச க்ருஹீத்வா த்வம் உபாகதா
சாமுண்டேதி ததோ லோகே க்யாதா தேவி பவிஷ்யஸி ! । *
 
.
 
(துர்காதேவியின் மந்த்ரமான நவார்ண மந்த்ரத்தில் சாமுண்
டாதேவியைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது). மூலப்ரக்ருதி
ரூபமாய் அம்பிகை இருக்கும்போது ஸத்வ, ரஜஸ், தமோகுணங்
களாகிய மூன்று குணங்களும் ஸமமான நிலையோடு அவளிடத்
திலிருப்பனவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 
'ஸத்வம் ரஜஸ் தம் இதி குணத்ரயமுதாஹ்ருதம் ।
 
ஸாம்யாவஸ்திதிரேதேஷாம் அவ்யக்திம் ப்ரக்ருதிம் விது: /I'
 
இந்தக் குணங்கள் மனித்தனியாக மேலிட்டிருக்கும்போது
வாமா, ஜ்யேஷ்டா, ரௌத்ரீ என்ற சக்தி ரூபங்களும்,ப்ரம்ஹா,
விஷ்ணு, ருத்ரர்களும் அம்பிகையிடமிருந்து ஏற்படுவதாகச்
சொல்லப்படும். ஆகவே அம்பிகையை இங்கு குணிநி என்று
சொல்லப்பட்டது. கு என்ற அக்ஷரமானது மனதிலிருக்கும்
அந்தகாரத்தைக் (இருட்டை, அக்ஞானத்தை)குறிக்கும். அம்
பிகை அவ்விதமான இருட்டைப் போக்குவதால் கு-ஹாரிணி
என்ற இங்கு சொல்லப்பட்டது. அம்பிகை குருமூர்த்தியாயிருப்
பது ஸ்ரீ லலிதாஸஹஸ்ரநாமத்திலும் "குருமூர்த்தி:", "குருமண்
டலரூபிணீ", "தக்ஷிணாமூர்த்திரூபிணீ" என்ற நாமங்களிலும்
சொல்லப்பட்டிருக்கிறது.