This page has not been fully proofread.

மூகபஞ்சசதீ
 
ப்ரகாசாம்சமென்றும், சக்தியென்பது விமர்சாம்சமென்றும்
சொல்லப்படும். திரும்பவும் சித் என்பதே சிவனென்றும் ப்ரகா
சாம்சமென்றும் சொல்லப்படும். விமர்சாம்சமான சக்திய
யானது
இருவகைப்பட்டது. பரப்ரம்ஹத்தில் சிவனோடு ஆமாசமாக
(இரண்டற) கலந்திருக்கும்போது அது ஸூக்ஷ்மமான ரூபத்
தோடிருக்கிறது. அப்போது அதை சித்ரூபிணீ, சைதன்யரூபா
என்று சொல்லப்படும். (ரூபமென்ற பதத்தின் விசேஷமென்ன
வென்றால் சித்தாக இருந்தபோதிலும் (பிறகு ஜகத்தாகப்பரிண
மிப்பதால்) அதினின்றும் வெறுபட்டது போன்றது என்பது
தாத்பர்யம்] ஆகவே சிவனை சித் என்றும், சக்தியை சித்ரூபிணி
யென்றும் சொல்லப்படும். இவ்விரண்டும் பரப்ரம்ஹத்தில் தனித்
தனியாக இராமல் சேர்ந்திருப்பதால் பரப்ரம்ஹத்தை ப்ரகாச
விமர்ச ஸாமரஸ்ய ரூபமென்று சொல்லப்படும்.
 
8
 
4. ப்ரளயகாலத்தில் ஸகல ஜகத்தும் நசித்துப்போய் ப்ரம்
ஹம் மட்டும் எஞ்சியிருக்கும்போது அதற்கு வேறு வஸ்துக்கள்
தேவையில்லாமல் தன்னை மறந்து ஸ்வாத்மாராமமாய் நிருபாதிக
ஸம்வித் ரூபமாயிருக்கிறது. பிறகு ப்ராணிகளுடைய பூர்வ கர்
மாக்களின் விசேஷத்தினால் ஸ்ருஷ்டி ஏற்படவேண்டிய ஸமயம
வரும்போது ப்ரம்ஹத்திற்கு ஒருவிதமான ஸ்ருஷ்டியோன்முக
மான உணர்ச்சி உண்டாகி (முந்தி இரண்டறக்கலந்திருந்த) அதி
னுடைய ப்ரகாச, விமர்சாம்சங்கள் எழுச்சியடைகின்றன. அப்
போது ப்ரகாசாம்சமானது அனன்யோன்முகமான அஹம் என்ற
பாவத்தோடிருக்கையில் விமர்சாம்சமான சக்தியானது இதம்
என்று சொல்லப்படுவதான ஜகத்திற்குக் காரணமாயிருந்து அவ்
வித ஜகத்தாகவும் பரிணமிக்கிறது. அதாவது சக்தியானவள்
ஸூக்ஷ்மரூபத்தில் விக்வோத்தீர்ணையாக (ஜகத்தை கடந்தவளாக)
பரப்ரம்ஹத்தில் சித்ரூயிணியாயிருந்தவள், ஸ்ருஷ்டி காலத்தில்
ஸ்தூல ரூபத்தில் விச்வாத்மிகையாக (ஜகத்தாக) தோன்றுகிறாள்.
இப்படி, ப்ரம்ஹமானது ஸ்ருஷ்டியோன்முகமாகி ப்பாவருத்திப்
பதும்,அஹம், இதம் என்ற பாவங்கள் தனிப்பட்டு அதினால்
இதம் என்று குறிப்பிடப்படும் ஜகத்தானது உண்டாவதும், பரப்
ரம்ஹத்தின் விமர்சாம்சத்தின் செயல்கள்.
 
1.
 
5. இவ்விதம் ஜகத்திற்குக்காரணமும்,பராஸம்வித்(பாசித்)
ஸ்வரூபமான பரப்ரம்ஹத்தின் விமர்சாம்சமுமான சக்தியாக